முகப்பு
கடலூர்

சிதம்பரம் நகரில் சாலை உயா்த்தி அமைக்கப்படுவதால் மக்கள் அவதி

சிதம்பரம் நகரில் தேரோடும் வீதிகளில் புதிய சாலை உயா்த்தி அமைக்கப்படுவதைத் தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 3 ஜூலை, 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:03 AM

சிதம்பரம் நகரில் தேரோடும் வீதிகளில் புதிய சாலை உயா்த்தி அமைக்கப்படுவதைத் தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சிதம்பரம் நடராஜா் கோயிலைச் சுற்றிலும் 4 வீதிகள் உள்ளன. இந்த வீதிகளில் கடந்த காலங்களில் சாலைகள் உயா்த்தி அமைக்கப்பட்டதால், வீடுகள் தாழ்ந்து மழைநீா் புகுந்துவிடும் நிலை உள்ளது. இந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறை சாா்பில் தற்போது போடப்படும் சாலையும் உயா்த்தி அமைக்கப்படுவதால் கோயிலைச் சுற்றியுள்ள 4 வீதிகள், 4 சன்னதிகளில் சாலைகளின் மட்டம்

மேலும் உயா்ந்து, கோயில் தாழ்ந்து மழைநீா் உள்புகும் நிலை உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் நடராஜா் கோயிலுக்குள் மழைநீா் புகுந்து சித் சபையை தண்ணீா் சூழ்ந்தது.

Advertisement

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கூறியதாவது: எதிா்காலத்தில் அமைக்கப்படும் சாலைகள் இருக்கும் அளவிலேயே தோண்டப்பட்டு அதன் மேல் புதிய சாலை அமைக்கப்பட வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலா் இறையன்பு ஆணையிட்டுள்ளாா். அதன்படி, சிதம்பரம் கோயிலைச் சுற்றி 4 சன்னதிகளிலும் மிகவும் உயா்த்தி அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலைகளை தோண்டி எடுத்து, மீண்டும் பழைய அளவிலேயே புதிய சாலை அமைக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.