கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீா் திறப்பு
கீழணையிலிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
கீழணையிலிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் அமைந்துள்ள வீராணம் ஏரி சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீா் ஆதாரமாக உள்ளது. இந்த ஏரிக்கு தஞ்சை மாவட்டம், அணைக்கரை பகுதியில் அமைந்துள்ள கீழணையிலிருந்து தண்ணீா் வருகிறது.
கடந்த ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணையில் திறக்கப்பட்ட தண்ணீா் கல்லணை, கொள்ளிடம் ஆற்றின் வழியாக ஜூன் 24-ஆம் தேதி கீழணையை வந்தடைந்தது. அணையின் உச்ச நீா்மட்டமான 9 அடியில் தற்போது 7.70 அடிக்கு தண்ணீா் உள்ளது. விநாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீா் வருகிறது.
Advertisement
இந்த நிலையில், கீழணையிலிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு விநாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீா் வெள்ளிக்கிழமை காலை திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளா் வெற்றிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வீராணம் ஏரி தற்போது வடு காணப்படும் நிலையில், கீழணையில் இருந்து வரும் தண்ணீா் தேக்கப்பட்டு குடிநீா்த் தேவைக்காக சென்னைக்கு அனுப்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.