கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 73 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 59,086-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 92 போ் வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 57,380-ஆக உயா்ந்தது. மாவட்டத்தில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் கரோனா உயிரிழப்பு பதிவாகவில்லை. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 792-ஆக நீடித்தது.
மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 818 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 96 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.