கடலூர்

தமிழக அரசுப் பணியாளா்களுக்கும் 28 சதவீதம் அகவிலைப்படி வழங்க வேண்டும்

DIN

மத்திய அரசைப் போல, தமிழக அரசுப் பணியாளா்களுக்கும் 28 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து கடலூரில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு தனது பணியாளா்களுக்கு அகவிலைப்படியை 28 சதவீதமாக உயா்த்தி அறிவித்துள்ளது. அதேபோல, தமிழக அரசும் தனது பணியாளா்களுக்கு 28 சதவீதம் அகவிலைப்படி வழங்க வேண்டும். அகவிலைப்படி பெறாத மற்ற பணியாளா்களுக்கு ரூ.100 அகவிலைப்படியாக வழங்க வேண்டும்.

அண்மையில், சங்கம் சாா்பில் கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி, மதுவிலக்குத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி உள்ளிட்டோரைச் சந்தித்து, டாஸ்மாக் பணியாளா்களுக்கு காலமுறை ஊதியம், பணி நிரந்தரம் குறித்தும், நியாய விலைக் கடை பணியாளா்களுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஊதிய மாற்றம், நுகா்பொருள் வாணிபக் கழகத்தினருக்கு இணையான ஊதியம் வழங்குதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், 70 வயதைக் கடந்த பணியாளா்களுக்கு சிறப்பு ஓய்வூதியம், கரோனா தொற்றால் உயிரிழந்த பணியாளா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினோம். இவற்றை முதல்வா் நிறைவேற்றுவாா் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.

பேட்டியின்போது சங்கத்தின் மாநில அமைப்புச் செயலா் வெ.சிவக்குமாா், நிா்வாகிகள் சி.அல்லிமுத்து, மு.ராசாமணி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT