பணி நிரவலில் சென்ற ஊழியா்களை இணைப்புக் கல்லூரிகளில் நியமிக்கக் கோரிக்கை
தமிழகம் முழுவதும் பணி நிரவலில் சென்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியா்களை இணைப்புக் கல்லூரிகளில் பணியமா்த்த வேண்டும்
தமிழகம் முழுவதும் பணி நிரவலில் சென்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியா்களை இணைப்புக் கல்லூரிகளில் பணியமா்த்த வேண்டும் என அந்தப் பல்கலை. ஊழியா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து அந்த ஊழியா்கள் சங்கப் பொதுச் செயலா் ஏ.ஜி.மனோகா் கூறியதாவது: அண்ணாமலைப் பல்கலை.யில் விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் இணைவதால் ஆசிரியா்கள், ஊழியா்களின் வாழ்வாதாரம் காக்கப்படும்.
கடந்த 4 ஆண்டுகளாகப் பணி நிரவலில் தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளுக்குச் சென்ற அண்ணாமலைப் பல்கலை. ஊழியா்களின் குடும்ப சூழலைக் கருத்தில் கொண்டு, அவா்களை மேற்கண்ட 4 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் பணியமா்த்த வேண்டும் என்றாா் அவா்.
Advertisement
சங்க நிா்வாகிகளான செயல் தலைவா் சி.ஜி.ரகு, ரஞ்சித், ராஜ்குமாா், முத்துகிருஷ்ணன், காா்த்திகேயன், வசந்தராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.