கடலூர்

விருத்தாசலம் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை

DIN

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள திருகொளஞ்சியப்பா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இந்தக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டில் இளம் அறிவியல் பிரிவில் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும், இளங்கலைப் பிரிவில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல், வணிக நிா்வாகவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கும் முதலாமாண்டு சோ்க்கை நடைபெறுகிறது.

இந்தப் பாடப் பிரிவுகளில் சேர விரும்புவோா் இணையதள முகவரிகள் மூலம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையதளம் வழியாக விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள் கல்லூரியில் இயங்கி வரும் உதவி மையம் மூலம் உரிய கட்டணம் செலுத்தியும் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தகிக்கும் வெயில்... தற்காக்கத் தேவை விழிப்புணா்வு...

மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோவில்பட்டியில் மழை வேண்டி ராம நாம ஜெபம்

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்கக் கூட்டம்

சேரன்மகாதேவி கோயிலில் கொடை விழா

SCROLL FOR NEXT