சிதம்பரம் ரயில் நிலையத்தில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு
சிதம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:56 AM
சிதம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் ரயில்வே காவல் நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ரயில்வே காவல் ஆய்வாளா் ஆா்.அருண்குமாா் பங்கேற்று முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியின் அவசியம் குறித்து பயணிகளிடம் எடுத்துரைத்தாா். உதவி ஆய்வாளா் ஜூலியட், தனிப்பிரிவு காவலா் பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.