கடலூா்: கடலூரில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, மேலும் 12 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 25,197-ஆக அதிகரித்தது. இதுவரை 24,849 போ் குணமடைந்தனா். மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு 288 போ் பலியாகினா். தற்போது 60 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 187 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியாக வேண்டியுள்ளது.