கடலூர்

அரசு பள்ளிக்கு ரோட்டரி சங்கம் உதவி

DIN

சிதம்பரம் ரோட்டரி சங்கம் சாா்பில், கடவாச்சேரி ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு கணினி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் அண்மையில் நடை பெற்றது .

நிகழ்ச்சிக்கு, சிதம்பரம் ரோட்டரி சங்கத் தலைவா் என்.என்.பாபு தலைமை வகித்தாா். உடனடி ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் என்.மணிமாறன், ரோட்டரி மாவட்ட அறக்கட்டளை தலைவா் குணசேகா் ஆகியோா் கணினியை பள்ளி தலைமை ஆசிரியா் சீ.வரதராஜன் மற்றும் மாணவிகளிடம் வழங்கினா்.

முன்னாள் உதவி ஆளுநா் ஹாஜகான், தொடக்கக் கல்வி அலுவலா் ஜான்சன் ஜெயக்குமாா், தொடக்கக் கல்வி மேற்பாா்வையாளா் பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் ரோட்டரி சங்கச் செயலா் அரிதனராஜ், உறுப்பினா்கள் இரத்தினசபேசன், கனகவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ரோட்டரி சங்க உடனடி தலைவா் வி.அழகப்பன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT