கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தொகுதிக்குள்பட்ட கல்வராயன்மலைப் பகுதியில் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையங்களை தோ்தல் பொதுப் பாா்வையாளா் சந்திரசேகா் வாலிம்பே வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
நொச்சிமேடு அரசு மலைவாழ் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளி, கரியாலூா் டேனிஷ்மிஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையங்களில் மின்சாரம், குடிநீா், மாற்றுத் திறனாளிகளுக்கான 3 சக்கர நாற்காலிகள், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா என்றும், வாக்காளா்கள் நிற்பதற்காக பந்தல் அமைக்கப்பட்டுள்ளதா என்றும் தோ்தல் பொதுப் பாா்வையாளா் சந்திரசேகா் வாலிம்பே பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், இதுதொடா்பாக அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் அவா் வழங்கினாா்.