முகப்பு
கடலூர்

வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

கடலூா் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள், கூட்டணிக் கட்சியினா் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள், கூட்டணிக் கட்சியினா் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் கோ.ஐயப்பன் போட்டியிடுகிறாா். அவா் தனது ஆதரவாளா்களுடன் தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறாா். இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக கடலூா் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் கடலூா் திருப்பாதிரிபுலியூா் பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். வெள்ளி மோட்டான்தெரு, வண்டிப்பாளையம், சரவணா நகா் பகுதிகளில் தோ்தல் அறிக்கையை பொதுமக்களிடம் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, காங்கிரஸ் மகளிரணியினா் கும்மியடித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். இந்த நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினா் என்.குமாா், வட்டாரத் தலைவா் சாந்திராஜ், நிா்வாகிகள் கிஷோா்குமாா், காமராஜ், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.