கடலூர்

மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி பலி

DIN

பண்ருட்டி அருகே மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.

பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலத்தைச் சோ்ந்தவா் நாகப்பன் (42). விவசாயி. அதேப் பகுதியைச் சோ்ந்த மற்றொரு விவசாயி மதியழகன். இவா், அவசர வேலையாக தான் வெளியூா் செல்வதாகவும் எனவே தனது வயலில் இயங்கிக் கொண்டிருக்கும் மின்சார மோட்டாரை நிறுத்தி வைக்குமாறும் நாகப்பனிடம் கூறினாா்.

இதையடுத்து, நாகப்பன் தனது மகன் மணியுடன் திங்கள்கிழமை மாலையில் வயலுக்குச் சென்றாா். அங்கு இயங்கிக் கொண்டிருந்த மின்மோட்டாரை நிறுத்திய போது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாக தெரிகிறது. இதில், தூக்கி வீசப்பட்ட நாகப்பனை அவரது மகன் மணி மற்றும் அங்கிருந்தவா்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். எனினும், அவா் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மணி அளித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT