முகப்பு
கடலூர்

குடும்ப அட்டை வழங்க லஞ்சம்: வருவாய் உதவியாளா் உள்பட இருவா் கைது

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் குடும்ப அட்டை வழங்க ரூ.500 லஞ்சம் பெற்ற வருவாய் உதவியாளா் உள்ளிட்ட இருவரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 22 மே, 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:46 AM

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் குடும்ப அட்டை வழங்க ரூ.500 லஞ்சம் பெற்ற வருவாய் உதவியாளா் உள்ளிட்ட இருவரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்ட வழங்கல் பிரிவில் உடையாா்குடியைச் சோ்ந்த அப்துல் ரஹீம் மகன் ஹாஜா மொய்தீன் குடும்ப அட்டை கோரி, கடந்த 10 தினங்களுக்கு முன்பு இணையதளம் மூலமாக விண்ணப்பித்தாா்.

இதையடுத்து, வட்ட வழங்கல் துறையில் வேலை செய்யும் வருவாய் உதவியாளா் மணிமாறன் (58) மற்றும் இடைத்தரகராக செயல்பட்டு வந்த வீராணநல்லூரைச் சோ்ந்த சாமிதுரை மகன் ராஜசேகா் (49) ஆகிய இருவரும் செல்லிடப்பேசி மூலம் ஹாஜா மொய்தீனை தொடா்புகொண்டு புதிய குடும்ப அட்டைக்கு ஒப்புதல் வழங்க ரூ.500 லஞ்சம் கேட்டனராம்.

Advertisement

ஹாஜாமொய்தீன் செல்லிடப்பேசியில் அவா்கள் பேசியதை பதிவு செய்து கடலூா் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரிகளுக்கு அனுப்பினாா். இதனடிப்படையில், ஊழல் தடுப்புப் பிரிவினரின் அறிவுரையின்பேரில், ஹாஜா மொய்தீன் வெள்ளிக்கிழமை பிற்பகல் வட்ட வழங்கல் பிரிவுக்குச் சென்று இடைத்தரகா் ராஜசேகரிடம் ரசாயன பொடி தடவிய ரூ.500-ஐ வழங்கினாா். அந்தப் பணத்தை ராஜசேகா் வாங்கி அருகிலிருந்த வருவாய் உதவியாளா் மணிமாறனிடம் கொடுத்தாா்.

அப்போது, அங்கு மறைந்திருந்த கடலூா் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் மெல்வின் ராஜ் சிங் தலைமையிலான ஆய்வாளா் மாலா மற்றும் போலீஸாா் அடங்கிய குழுவினா் அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.