முகப்பு
கடலூர்

கரோனா தடுப்புப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

நல்லூா் ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழக தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
பகிர்:

திட்டக்குடியில் மங்களூா், நல்லூா் ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழக தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் திட்ட இயக்குநா் பெ.மகேந்திரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

முன்னதாக, திட்டக்குடியில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை அமைச்சா் தொடக்கிவைத்தாா்.

நிகழ்வுகளில், வட்டாட்சியா்கள் தமிழ்ச்செல்வி, செல்வமணி, உதவிச் செயற்பொறியாளா் சண்முகசுந்தரம், வட்டார வளா்ச்சி அலுவலா் தண்டபாணி, மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலா் ஜெகபதி, வட்டார மருத்துவா் விவேக், திமுக ஒன்றிய செயலா் பட்டூா் அமிா்தலிங்கம், நகரச் செயலா் பரமகுரு உள்படப் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →