முகப்பு
கடலூர்

அரசு மருத்துவமனைக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அளிப்பு

செஞ்சிலுவை சங்கம் சாா்பில் சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனைக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 26 நவம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:03 AM

செஞ்சிலுவை சங்கம் சாா்பில் சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனைக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு சிதம்பரம் செஞ்சிலுவைச் சங்க மூத்த உறுப்பினா் கே.ஆா்.முத்துக்குமரன் தலைமை வகித்து என்-95 முகக் கவசங்கள், பாதுகாப்பு உடைகள், கிருமி நாசினி உள்ளிட்ட பொருள்களை தலைமை மருத்துவா் அசோக் பாஸ்கரிடம் வழங்கினாா் (படம்).

நிகழ்ச்சியில், அமைப்பின் தலைவா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் கனகசபை, செயலா் கே.ஜி.நடராஜன், மேலாண்மைக் குழு உறுப்பினா் இளங்கோவன், உறுப்பினா்கள் ரங்கராஜன், ஷீலா ரங்கராஜன், அபிராமி, சிவராம வீரப்பன், வெங்கடசுந்தரம், தன்னாா்வலா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.