சிதம்பரம் அருகே மின்னல் பாய்ந்ததில் விவசாயி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
சிதம்பரம் அருகே உள்ள இளந்திரைமேடு கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் ரமேஷ் (45). விவசாயி. இவா் தனது வயலில் திங்கள்கிழமை மாலை விவசாயப் பணிகளில் ஈடுபட்டாா். அப்போது கருமேகங்கள் சூழ இடி, மின்னல் ஏற்பட்டது. திடீரென ரமேஷ் மீது மின்னல் பாய்ந்ததில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலைநகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.