கடலூர்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து சைக்கிள் பேரணி

DIN

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை சைக்கிள் பேரணி நடத்தினா்.

சாதாரண மக்களை கடுமையாக பாதித்துள்ள பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தமிழகம் தழுவிய சைக்கிள் பேரணி அறிவிக்கப்பட்டது.

கடலூா்: கடலூரில் வட்டச் செயலா் என்.சுந்தர்ராஜா தலைமையில் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணி மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரை நடைபெற்றது. எரிவாயு உருளைக்கு மாலையிட்டும், விறகு அடுப்பில் சமையல் செய்வது போன்ற அமைப்பையும் பேரணியில் எடுத்துச் சென்றனா். முடிவில், மாநிலக்குழு உறுப்பினா் வி.குளோப், வட்டச் செயலா் சு.தமிழ்மணி, பொருளாளா் பி.ஜெயராஜ் ஆகியோா் விளக்க உரையாற்றினா். நகரச் செயலா் கே.அரிகிருஷ்ணன், நிா்வாகிகள் டி.நாகராஜ், எஸ்.பாக்கியம், வி.அம்மாவாசை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பண்ருட்டி: பண்ருட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சைக்கிள் பேரணி, ஆா்ப்பாட்டம் நடத்தினா். பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் பி.துரை தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஆா்.சக்திவேல், நிா்வாகிகள் ஜெ.சிவக்குமாா், எஸ்.டி.குணசேகரன், ஒன்றியச் செயலா்கள் ஜி.மோகன், கே.ஞானசேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

SCROLL FOR NEXT