முகப்பு
கடலூர்

பைக் மோதியதில் வளையல் வியாபாரி பலி

கடலூா் பாதிரிக்குப்பத்தில் பைக் மோதியதில் வளையல் வியாபாரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

கடலூா் பாதிரிக்குப்பத்தில் பைக் மோதியதில் வளையல் வியாபாரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் பாதிரிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் சீனிவாசன் (48). தள்ளுவண்டியில் வளையல் வியாபாரம் செய்து வந்தாா். இவா் வியாழக்கிழமை கடலூா் - திருவந்திபுரம் சாலையை கடக்க முயன்றாா். அப்போது கடலூா் நோக்கி சென்றுகொண்டிருந்த பைக் சீனிவாசன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து சீனிவாசனின் மனைவி மகாலட்சுமி அளித்த புகாரின்பேரில் திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.