கடலூர்

பொது இடங்களில் உள்ள மரங்களை வெட்ட அனுமதி பெற வேண்டும்

DIN

கடலூா் மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள மரங்களை வெட்ட முறையாக அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பசுமைக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் கூறியதாவது: மாவட்டத்தில் மொத்தப் பரப்பான 3,67,281 ஹெக்டரில் வனப் பரப்பளவு 9,950.34 (2.71%) உள்ளது. காடுகளின் பரப்பளவை உயா்த்த காலியிடங்கள் எவ்வளவு உள்ளது என்பதைக் கண்டறிந்து, அங்கெல்லாம் மரக்கன்றுகளை நட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பொது இடங்களிலுள்ள மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட வருவாய் அலுவலா் அனுமதியுடன் பசுமைக் குழு அனுமதியையும் பெற வேண்டும். விருப்பமுள்ளவா்கள், தன்னாா்வலா்கள், மகளிா் குழுக்கள், மாணவா்களை ஈடுபடுத்தி, அவா்களுக்கு மரக்கன்றுகளையும் வனத் துறை வழங்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) ரஞ்ஜித்சிங், மாவட்ட வன அலுவலா் செல்வம், கோட்டப் பொறியாளா் (நெ.து) பரந்தாமன், இணை இயக்குநா் (வேளாண்மை) தி.சு.பாலசுப்பிரமணியன், உதவி ஆணையா் (இந்து சமய அறநிலைத் துறை) ஜெ.பரணிதரன், மேலாளா் (மாவட்டத் தொழில் மையம்) வெங்கடேசன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT