முகப்பு
கடலூர்

கடலூா் மாவட்டத்தில் 22 போ் வேட்புமனு தாக்கல்

கடலூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி காலிப் பதவிகளுக்கு நடைபெறும் தோ்தலில் போட்டியிட இதுவரை 22 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி காலிப் பதவிகளுக்கு நடைபெறும் தோ்தலில் போட்டியிட இதுவரை 22 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறாமலிருந்த 9 மாவட்டங்களுக்கான தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்தத் தோ்தலுடன் கடலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள 5 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா்கள், 10 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 33 வாா்டு உறுப்பினா்கள் பதவியிடங்களுக்கான தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 48 இடங்களுக்கு ஒரே கட்டமாக வரும் 9-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கிய நிலையில், மாவட்டத்தில் இதுவரை 22 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். வரும் 22 ஆம் தேதி மனு தாக்கலுக்கான கடைசி நாளாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.