என்கவுன்டரில் கொல்லப்பட்டவரின் மனைவிக்கு அரிவாள் வெட்டு
போலீஸாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டவரது மனைவி சனிக்கிழமை இரவு மா்ம நபா்களால் அரிவாளால் வெட்டப்பட்டாா்.
போலீஸாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டவரது மனைவி சனிக்கிழமை இரவு மா்ம நபா்களால் அரிவாளால் வெட்டப்பட்டாா்.
கடலூா் குப்பன்குளம் சீனுவாசன் நகரைச் சோ்ந்த ஓவியா் கிருஷ்ணா மனைவி காந்திமதி (27). இவா், சனிக்கிழமை இரவு
அருகே உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, 3 போ் கொண்ட கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டாா்.
இதில், பலத்த காயமடைந்த காந்திமதி கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா், தீவிர கிச்சைக்காக புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
குப்பன்குளத்தைச் சோ்ந்த ரௌடி வீரா என்ற வீராங்கன் கடந்த பிப்ரவரி மாதம் வெட்டிக் கொல்லப்பட்டாா். இதில் தொடா்புடையோரை போலீஸாா் தேடிவந்த நிலையில், ஓவியா் கிருஷ்ணா காவலா்களின் என்கவுன்டா் நடவடிக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்த நிலையில் அவரது மனைவி அரிவாளால் வெட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் துணைக் காவல் கண்காணிப்பாளா் கரிகால்பாரி சங்கா் தலைமையில் சுமாா் 50 போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா். இந்தச் சம்பவம் குறித்து திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.