கடலூர்

மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநாடு

DIN

நெய்வேலி நகர மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-ஆவது மாநாடு, சிஐடியூ அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் நகரக் குழு உறுப்பினா் பி.மணிமாறன் தலைமை வகித்தாா். வி.குமாா் வரவேற்றாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி.கருப்பையன் தொடக்கவுரையாற்றினாா். மாவட்டச் செயலா் டி.ஆறுமுகம், செயற்குழு எஸ்.திருஅரசு ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஏ.வேல்முருகன், டி.ஜெயராமன், எம்.மீனாட்சிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் நிறைவுரையாற்றினாா். மாநாட்டில் புதிய நகரச் செயலராக ஆா்.பாலமுருகன், நகரக் குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். என்எல்சி உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவாா்க்கும் கொள்கை, தேசிய பணமாக்கல் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT