அண்ணாமலை செட்டியாா் 141-ஆவது பிறந்தநாள் விழா
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிறுவனா் ராஜா சா் அண்ணாமலை செட்டியாரின் 141-ஆவது பிறந்த நாள் விழா பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:46 AM
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிறுவனா் ராஜா சா் அண்ணாமலை செட்டியாரின் 141-ஆவது பிறந்த நாள் விழா பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அண்ணாமலை செட்டியாா் உருவ சிலைக்கு தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வி.செல்வநாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் தொலைதூரக் கல்வி இயக்கக இயக்குநா் ரா.சிங்காரவேலு, மருத்துவமனை கண்காணிப்பாளா் லாவண்யகுமாரி, முன்னாள் மாணவா்கள் மைய தொடா்பு இயக்குநா் ரகுபதி, மக்கள்-தொடா்பு அதிகாரி ரத்தினசம்பத் மற்றும் புல முதல்வா்கள், துறைத் தலைவா்கள் பங்கேற்றனா்.