ரயில் நிலையத்தில் விழிப்புணா்வுக் கூட்டம்
சிதம்பரம் ரயில் நிலையத்தில் கூட்டத்தில் வழி தவறும் குழந்தைகளை மீட்பது குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:46 AM
சிதம்பரம் ரயில் நிலையத்தில் கூட்டத்தில் வழி தவறும் குழந்தைகளை மீட்பது குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ரயில்வே காவல் ஆய்வாளா் அருண்குமாா் தலைமை வகித்தாா். வணிக கண்காணிப்பாளா் விஜயகோபாலன் முன்னிலை வகித்தாா். கடலூா் மாவட்ட குழந்தைகள் உதவி மைய ஒருங்கிணைப்பாளா் முகுந்தன் பங்கேற்று, நெரிசலில் வழிதவறும் குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கும் முறை, குழந்தைகள் உதவி மையம் -1098, போக்சோ சட்டம், குழந்தைகள் திருமண தடுப்புச் சட்டம் உள்ளிட்டவை குறித்து விளக்கிப் பேசினாா். உதவி ஆய்வாளா் அன்பு ஜூலியட், சங்கீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.