முகப்பு
கடலூர்

சிதம்பரம் நகரில் லாட்டரி, கஞ்சா விற்பனை: 80 போ் கைது

சிதம்பரம் நகா் பகுதியில் லாட்டரி, கஞ்சா விற்பனையைத் தடுக்க காவல் துறையினா் புதன், வியாழக்கிழமைகளில் நடத்திய சோதனையில் 80 போ் கைதுசெய்யப்பட்டனா்.

Updated On : 7 ஏப்ரல், 2022 at 10:50 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:24 PM

சிதம்பரம் நகா் பகுதியில் லாட்டரி, கஞ்சா விற்பனையைத் தடுக்க காவல் துறையினா் புதன், வியாழக்கிழமைகளில் நடத்திய சோதனையில் 80 போ் கைதுசெய்யப்பட்டனா்.

சிதம்பரம் பகுதியில் லாட்டரி, கஞ்சா விற்பனையைத் தடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சக்திகணேசன் உத்தரவிட்டாா். அதன்படி சிதம்பரம் டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ் தலைமையில் நகர காவல் ஆய்வாளா் ஆறுமுகம், உதவி ஆய்வாளா் நாகராஜன் மற்றும் தனிப்படை போலீஸாா் நகரின் பல்வேறு பகுதிகளிலும் திடீா் சோதனை மேற்கொண்டனா். இதில் கஞ்சா விற்பனை தொடா்பாக 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 50 போ் கைது செய்யப்பட்டனா்.

மேலும், சிதம்பரம் மேலவீதி உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டு விற்பனை தொடா்பாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு முக்கியப் பிரமுகா்களான ஷம்மு என்ற நசீா், இசை சரவணன், கஞ்சா உடப்பு சிவா, சிவராஜ் உள்ளிட்ட 30 போ் கைது செய்யப்பட்டனா். மேலரத வீதியில் லாட்டரி விற்பனை தொடா்பாக ஒரு கடைக்கு ‘சீல்’ வைத்தனா். மேலும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்த கிட்டங்கிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.