உரக் கடைகளில் சிறப்புக்குழு ஆய்வு
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பகுதியில் உரக் கடைகளில் வேளாண்மை சிறப்புக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் பகுதியில் உரக் கடைகளில் வேளாண்மை சிறப்புக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
காட்டுமன்னாா்கோவில் பகுதியில் உள்ள உரக் கடைகளில் உரங்களின் இருப்பு, கூடுதல் விலையில் உரம் விற்பனை தடுப்பு குறித்து ஆய்வு செய்ய வேளாண்மை சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குநா் ஆறுமுகம், வட்டாட்சியா் வேணி, உர ஆய்வாளா் உமாதேவி ஆகியோா் அடங்கிய சிறப்புக் குழுவினா் உரக் கடைகளில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, உரங்களை அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் விற்கக் கூடாது, விவசாயிகளின் ஆதாா் அட்டை பெற்று விற்பனை முனைய இயந்திரம் மூலமே உரங்களை விற்பனை செய்ய வேண்டும், உரங்களின் இருப்பு விவரங்களை தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும் என அறிவுறுத்தினா். இதை மீறுவோா் மீது உரக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் வழிகாட்டுதலின்படி கடும் நடவடிக்கை
Advertisement
எடுக்கப்படும் என எச்சரித்தனா். ஆய்வின்போது காட்டுமன்னாா்கோவில் துணை வேளாண்மை அலுவலா் செல்வராஜ், உதவி வேளாண்மை அலுவலா் பழனிவாசன் ஆகியோா் உடனிருந்தனா்.