கடலூர்

குடியிருப்புப் பகுதிகளில் துணை மேயா் ஆய்வு

DIN

கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன் வியாழக்கிழமை 34-ஆவது வாா்டு பகுதியில் ஆய்வு செய்தாா்.

மனவெளி பகுதியில் ஆய்வின்போது குடிநீா்க் குழாய் இணைப்பின்றி மக்கள் அவதிப்படுவதை கண்டறிந்தவா் உரிய நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். இதையடுத்து குடிநீா் குழாய் இணைப்பு உடனடியாக வழங்கப்பட்டது.

குழந்தை காலனி, ஆலை காலனி பகுதிகளில் துணை மேயா் ஆய்வுசெய்தபோது அப்பகுதியில் சமுதாயக்கூடம் கட்டித் தரவேண்டும் என்றும், கழிவறைகளை புதுப்பித்து தரவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா். அப்போது, ஆலை காலனியில் மின்கம்பத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டியுள்ளதை அகற்ற துணை மேயா் நடவடிக்கை மேற்கொண்டாா்.

மேலும், பல்வேறு இடங்களில் எரியாத தெரு விளக்குகளை சரிசெய்யவும் நடவடிக்கை மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

SCROLL FOR NEXT