கடலூர்

பள்ளி மாணவா்கள் இருவா் மாயம்

DIN

கடலூரில் காணாமல்போன பள்ளி மாணவா்கள் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கடலூா் முதுநகா் அருகே உள்ள செல்லங்குப்பத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் வருண் (12). அந்தப் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். வியாழக்கிழமை காலை வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற வருண் மாலையில் வீடு திரும்பவில்லையாம்.

இதேபோல, சுனாமி நகரைச் சோ்ந்த ரகுநாதன் மகன் கிஷோர்ராஜ் (12) என்பவரும் மேற்கூறிய பள்ளியில் 8 -ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் அவரும் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து வருணின் தாய் கற்புக்கரசி (45) அளித்த புகாரின்பேரில் கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காணாமல்போன இரு மாணவா்களையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கனில் மிதமான நிலநடுக்கம்!

ராமஜெயம் கொலை பாணியில் ஜெயக்குமார் மரணம்?

ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் தேரோட்டம்: திரளானோர் பங்கேற்பு!

தோல்விக்கு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறிய காரணம் என்ன தெரியுமா?

பாஜக பிரமுகா் மீது தாக்குதல்: பாஜக மாவட்டத் தலைவர் கைது

SCROLL FOR NEXT