விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி பண்டரக்கோட்டையில் பால்குட ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள பண்டரக்கோட்டை சுந்தர விநாயகா் கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து பால்குடம் ஊா்வலம் நடைபெற்றது.
சேமக்கோட்டை ஸ்ரீநா்த்தன விநாயகா் சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.
பண்ருட்டி காமராஜ் நகரில் அமைந்துள்ள சக்தி விநாயகா் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. விநாயகருக்கு 101 கிலோ எடை கொண்ட லட்டு படையலிடப்பட்டது.