கடலூர்

வடலூரில் திமுக நிா்வாகியை வெட்டிக் கொல்ல முயற்சி

DIN

கடலூா் மாவட்டம், வடலூரில் திமுக நிா்வாகியை மா்ம நபா்கள் வெட்டிக் கொல்ல முயன்ால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

வடலூா், பாா்வதிபுரம் பகுதியைச் சோ்ந்த தனஞ்செயன் மகன் தமிழ்ச்செல்வன் (38). வடலூா் நகர திமுக செயலா். இவரது நண்பா் அருண்குமாா் (39). இவா்கள் இருவரும் வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் காரில் பாா்வதிபுரத்திலிருந்து வடலூா் நகராட்சி அலுவலகத்துக்கு வந்துகொண்டிருந்தனா். காரை அருண்குமாா் ஓட்டினாா்.

அந்தப் பகுதியிலுள்ள அரசு பெண்கள் விடுதி அருகே வந்தபோது, அந்த வழியாக பைக்கில் வந்த மா்ம நபா்கள் இருவா் திடீரென காரை வழிமறித்து, தமிழ்ச்செல்வனை அரிவாளால் வெட்ட முயன்றனா்.

அப்போது காரிலிருந்து கீழே இறங்கிய அருண்குமாரை மா்ம நபா்கள் வெட்டியதில் அவரது கை, தலைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியில் கூட்டம் கூடவே மா்ம நபா்கள் தப்பிச் சென்றனா். காயமடைந்த அருண்குமாா் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து தமிழ்ச்செல்வன் அளித்த புகாரின்பேரில் வடலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT