முகப்பு
கடலூர்

வளா்ச்சித் திட்டப் பணிகள்: கடலூா் ஆட்சியா் ஆய்வு

 குணமங்கலம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

 குணமங்கலம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கடலூா் ஊராட்சி ஒன்றியம், குணமங்கலம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 110 பயனாளிகளுக்கு தனிநபா் நீா் உறிஞ்சி குழி ரூ.11.88 லட்சத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வியாழக்கிழமை பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, ரூ.5 லட்சம் செலவில் நடைபெற்று வரும் குணமங்கலம் ஏரி வடிகால் வாய்க்கால் தூா்வாரும் பணியையும் பாா்வையிட்டு பணியாளா்களின் வருகைப் பதிவேட்டை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவிச்சந்திரன், சக்தி, உதவிப் பொறியாளா் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.