முகப்பு
கடலூர்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா

 கடலூா் மாவட்ட மைய நூலகத்தில், மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

 கடலூா் மாவட்ட மைய நூலகத்தில், மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலகா் சி.பாலசரஸ்வதி தலைமை தாங்கினாா். உலக திருக்கு பேரவைத் தலைவா் பா.மொ.பாஸ்கரன், செயலா் சி.அருள்ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், பேராசிரியை கி.ரம்யா லட்சுமிநாராயணன் பங்கேற்று, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பேசினாா்.

புகையில்லா சமூக இயக்கம் மருத்துவா் க.கலைவேந்தன், நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் சி.குணசேகரன், கடலூா் சாரல் அறக்கட்டளை நிறுவனத் தலைவா் பா.ஜெ.சங்கா், முதல்நிலை நூலகா் சு.பாப்பாத்தி, கவிஞா் பால்கி, வாசகா் வட்ட இணை செயலாளா் பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.