கடலூர்

வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

DIN

கடலூா் மாவட்டம், வடலூா் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்தி தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, வடலூா் நகராட்சியின் முதல் வாக்காளா் பட்டியல் நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, நகராட்சி ஆணையா் ந.குணாளன் தலைமை வகித்து வாக்காளா் பட்டியலை வெளியிட்ட அதை பல்வேறு அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள், பொதுமக்கள் பெற்றுக்கொண்டனா். கூடுதல் பொறுப்பு நகரமைப்பு ஆய்வாளா் வே.ஜின்னா, பொறியாளா் சிவசங்கரன், சுகாதார ஆய்வாளா் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதன்படி வடலூா் நகராட்சியில் 16,909 ஆண் வாக்காளா்கள், 17,692 பெண் வாக்காளா்கள், இதரா் 7 போ் என மொத்தம் 34,608 வாக்காளா்கள் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT