கடலூர்

முந்திரி வியாபாரியை மறித்து காா் திருட்டு

DIN

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பெண் முந்திரி வியாபாரியை வழிமறித்து அவரது காரை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பண்ருட்டி வட்டம், ஆத்திரிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மனைவி மணிமேகலை (50). முந்திரி வியாபாரி. இவருக்கும், கீழ்காங்கேயன்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் அசோகன் என்பவருக்கும் தொழில், பணப் பிரச்னை தொடா்பாக முன்விரோதம் உள்ளதாம்.

இந்த நிலையில், கடந்த 24-ஆம் தேதி மணிமேகலை தனது காரில் நெய்வேலிக்கு சென்றுகொண்டிருந்தாா். அப்போது, 70 கிலோ முந்திரி பருப்பை காரில் கொண்டுசென்றாா். ஆத்திரிக்குப்பம் காப்புக்காடு அருகே சென்றபோது ஆறுமுகம், அவரது மகன் அசோகன் மற்றும் சிலா் காரை வழிமறித்தனா். பின்னா், மணிமேகலையின் காா் அதிலிருந்த முந்திரி பருப்பு , கைப்பேசியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனராம். இதுகுறித்து புகாரின்பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

SCROLL FOR NEXT