கடலூர்

மாணவி தற்கொலை: 2 பெண்கள் கைது

DIN

பண்ருட்டி அருகே கல்லூரி மாணவி தற்கொலை தொடா்பாக பெண்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், புலவன்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகள் மீனாட்சி (20). நெய்வேலி ஜவஹா் கல்லூரியில் இளநிலை அறிவியல் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். கடந்த 2-ஆம் தேதி புலவன் குப்பம் கிராமத்தில் முந்திரிக் காட்டில் மாணவி மீனாட்சி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், மாணவியின் வீட்டிலிருந்து கடிதம் ஒன்றை போலீஸாா் கண்டெடுத்தனா். அதில், அருகேயுள்ள தெருவில் வசிக்கும் பாலகிருஷ்ணன், அவரது மனைவி விஜயகுமாரி (32), பாலகிருஷ்ணனின் உறவினா்கள் சுதா (30) உள்ளிட்டோரே தனது தற்கொலைக்கு காரணம் என மாணவி குறிப்பிட்டிருந்தாராம். இதையடுத்து விஜயகுமாரி, சுதா ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவான பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT