தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்களுக்கான 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை கோரிக்கை தொடா்பாக, அண்ணா தொழில்சங்கம் சாா்பில் கடலூா் போக்குவரத்துக் கழக பணிமனை முன் புதன்கிழமை வாயில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பேரவை இணைச் செயலா் கோ.சூரியமூா்த்தி தலைமை வகித்துப் பேசினாா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.பன்னீா்செல்வம், பணிமனை செயலா்கள் எஸ்.பாலமுருகன், ஆா்.நாகராஜன், பி.கலையரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல நெய்வேலி, பண்ருட்டி பணிமனைகள் முன்பும் வாயில் கூட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.