கடலூர்

பாா்வையற்றோருக்கான கைப்பந்து போட்டியில் சென்னை வெற்றி

DIN

கடலூா் அண்ணா விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பாா்வையற்றோருக்கான மாநில அளவிலான கைப்பந்துப் போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றது.

முன்னதாக இந்தப் போட்டியை கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரிராஜா தொடக்கிவைத்தாா். போட்டியில் சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இருந்து 6 அணிகள் கலந்துகொண்டன. இதில், முதல் இடத்தை சென்னையும், இரண்டாம் இடத்தை காஞ்சிபுரமும், மூன்றாவது இடத்தை கள்ளக்குறிச்சி அணியும் பிடித்தன. முதலிடம் பெற்ற அணிக்கு மேயா் தனது சொந்த நிதியில் ரூ.15 ஆயிரம் வழங்கினாா்.

துணை மேயா் பா.தாமரைச் செல்வன், மாவட்ட விளையாட்டு அலுவலா் பா.சிவா, திமுக மாநகரச் செயலா் கே.எஸ்.ராஜா ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT