துப்புரவுப் பணியாளா்களுக்கு நல உதவிகள்
ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சாா்பில், துப்புரவுப் பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் நகருக்கு கடந்த 3-ஆம் தேதி பங்காரு அடிகளாா் வந்ததையொட்டி, சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சாா்பில், துப்புரவுப் பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சித்த மருத்துவா் எம்.எம்.அா்ச்சுனன் தலைமை வகித்தாா். பேராசிரியா் டிஎஸ்எஸ்.பாலக்குமாா் வரவேற்றாா். விழாவில் ஊராட்சி மன்றத் தலைவா் இ.கீரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 16 துப்புரவுப் பணியாளா்களுக்கு மளிகைப் பொருள்களையும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை ரூ.30 ஆயிரமும், அண்ணாமலைப் பல்கலைக்கழக கால்நடை பண்ணைக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தீவணத்தையும் வழங்கினாா்.
விழாவில் பேராசிரியா் டிஎஸ்எஸ்.ஞானக்குமாா், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் வி.தையல்நாயகி, ஊராட்சி மன்றச் செயலா் ஏ.தேவதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். எஸ்.காா்த்திக்ராஜா நன்றி கூறினாா்.
Advertisement