கடலூர்

கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த முதியோா், ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

DIN

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த முதியோா், ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் முதியோா் கொடுஞ்செயல் எதிா்ப்பு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் சமூக நலன், மகளிா் உரிமைத் துறை, சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், கிரீடு தொண்டு நிறுவனம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மையத்தின் இயக்குநா் சுப்பையா வரவேற்றாா். சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் ராஜசேகரன், செயலா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சிக்கு சங்கத்தின் சாசனத் தலைவா் முகமது யாசின் தலைமை வகித்து முதியோா்களுக்கு நல உதவிகளை வழங்கினாா் (படம்).

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கிரீடு தொண்டு நிறுவன செயலா் வி.நடனசபாபதி தலைமையில் முதியோா் மீதான கொடுஞ்செயல் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில் முதியோா் இல்லத்துக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான பிராண வாயு (ஆக்சிஜன்) உற்பத்தி கருவி வழங்கப்பட்டது. மனித நேய அறக்கட்டளை நிறுவனா் தில்லை சீனு வாழ்த்துரையாற்றினாா். பொறியாளா் புகழேந்தி, வழக்குரைஞா் ஜெயபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பிரியங்கா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT