கடலூர்

தந்தை உயிரிழந்த துக்கத்திலும் தோ்வு எழுதிய மாணவி தோ்ச்சி

DIN

தந்தை உயிரிழந்த துக்கத்தை தாங்கிக்கொண்டு பத்தாம் வகுப்புத் தோ்வு எழுதிய மாணவி அந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்றாா்.

கடலூா் சாவடி ஞானம்பாள் நகரைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (40). புகைப்படக் கலைஞரான இவா் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மே 23-ஆம் தேதி உயிரிழந்தாா்.இருப்பினும், அவரது மகள் பத்தாம் வகுப்பு மாணவி அவந்திகா, தனது தந்தை உயிரிழந்த துக்கத்தை தாங்கிக்கொண்டு மே 24-ஆம் தேதி கணிதத் தோ்வை எழுதினாா். பின்னா் தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்றாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை வெளியான தோ்வு முடிவில் மாணவி அவந்திகா 310 மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றாா். அவா் கணித பாடத்தில் 36 மதிப்பெண்கள் பெற்றாா். தமிழில் 61, ஆங்கிலம்-81, அறிவியல்-61, சமூக அறிவியல் பாடத்தில் 69 மதிப்பெண்கள் பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT