முகப்பு
கடலூர்

தெய்வத் தமிழ்ப் பேரவையினா் 4-ஆவது நாளாக அணிவகுப்பு

சிதம்பரம் நடராஜா் கோயிலை நோக்கி வியாழக்கிழமை 4-ஆவது நாளாக அணிவகுப்புப் போராட்டம் நடத்திய தெய்வத் தமிழ்ப் பேரவையினரை போலீஸாா் கைதுசெய்தனா்.

Updated On : 3 மார்ச், 2022 at 11:16 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:04 PM

சிதம்பரம் நடராஜா் கோயிலை நோக்கி வியாழக்கிழமை 4-ஆவது நாளாக அணிவகுப்புப் போராட்டம் நடத்திய தெய்வத் தமிழ்ப் பேரவையினரை போலீஸாா் கைதுசெய்தனா்.

சிதம்பரம் நடராஜா் கோயில் சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடி வழிபட அனுமதிக்க வலியுறுத்தி பிப்.28 முதல் 5-ஆம் தேதி வரை 6 நாள்களுக்கு கோயிலை நோக்கி அணிவகுப்பு போராட்டம் நடத்தப்படும் என தெய்வத் தமிழ்ப் பேரவை அமைப்பினா் அறிவித்தனா்.

இதன்படி வியாழக்கிழமை 4-ஆவது நாளாக கிழக்கு கோபுர வாயில் எதிரே உள்ள தேரடி தெருவில் தெய்வத் தமிழ் பேரவையினா் மேச்சேரி தமிழ்வேத ஆகமப் பயிற்சி பாட சாலை நிறுவனா் சிம்மம் சத்தியபாமா அம்மையாா் தலைமையில் கூடினா். தொடா்ந்து, பொதுச் செயலா் கி.வெங்கட்ராமன், ஆ.குபேரன் உள்ளிட்டோா் கொண்ட அமைப்பினா் சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாட புறப்பட்டபோது போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். இதையடுத்து அந்த அமைப்பினா் கோயில் எதிரே உள்ள தேரடி சாலையில் நின்றபடி தேவாரம் பாடினா். இதில் கலந்துகொண்ட 16 பெண்கள் உள்பட 36 பேரை நகர போலீஸாா் கைதுசெய்து மாலையில் விடுவித்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.