கடலூர்

கள்ளநோட்டுகள் பறிமுதல்: இருவா் கைது

DIN

கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் தொடா்பாக பெண் உள்பட இருவரை கைது செய்த போலீஸாா், தனிப்படை அமைத்து மற்றொருவரை தேடி வருகின்றனா்.

திட்டக்குடி அருகே உள்ள டி.இளமங்கலத்தில் பெட்டிக் கடையில் கள்ள ரூபாய் நோட்டு அளித்தது தொடா்பாக திட்டக்குடி வசிஷ்டபுரத்தைச் சோ்ந்த சிவக்குமாா் மனைவி கௌதமி (32), திட்டக்குடி நடுவீதியைச் சோ்ந்த பெ.செந்தில்குமாா் (47) ஆகியோரை திட்டக்குடி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், இருவரது வீட்டிலும் சோதனை நடத்தி ரூ.26,500-க்கான கள்ள நோட்டுகளையும் பறிமுதல் செய்தனா்.

தொடா் விசாரணையில், இவா்கள் பெரம்பலூரைச் சோ்ந்த ராமசாமி என்பவரிடமிருந்து கள்ள நோட்டுகளை வாங்கி வந்து புழக்கத்தில் விட்டது தெரியவந்தது. இதையடுத்து, ராமசாமியைப் பிடிக்க துணைக் கண்காணிப்பாளா் சிவா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

SCROLL FOR NEXT