கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் நடைபெற்று வரும் கடற்கரை விளையாட்டு போட்டிகள். 
கடலூர்

கடலூர்: கடற்கரை விளையாட்டு போட்டிகள்; 121 அணிகள் பங்கேற்பு

கடலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கடற்கரை விளையாட்டு போட்டிகள் கடலூர் தேவனாம்பட்டினம்

DIN

கடலூர்: கடலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கடற்கரை விளையாட்டு போட்டிகள் கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் இன்று காலையில் துவங்கியது. போட்டியை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா துவக்கி வைத்தார்.

இருபாலர்களுக்கும் தனித்தனியே கபடி, கையுந்து பந்து, கால்பந்து போட்டிகள் நடைபெறுகிறது. கபடியில் 31 ஆண்கள் அணியும், 9 பெண்கள் அணியும் பங்கேற்றனர். 

கையுந்து பந்து  போட்டியில் 34 ஆண்கள் அணியும், 15 பெண்கள் அணியும் பங்கேற்றனர். கால்பந்து போட்டியில் 27 ஆண்கள் அணியும், 6 பெண்கள் அணியும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். வயது வரம்பு இல்லாமல் அனைவரும் பங்கேற்கும் வகையிலான இப்போட்டி நாக்-அவுட் முறையில் நடைபெறுகிறது.

போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு இன்று மாலையில் பரிசு வழங்கப்படுகிறது. முதலிடம் பிடிக்கும் அணிகள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேக்கு இமாலய இலக்கு!

ரூ. 2,000 கோடி முதலீடு செய்த ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ்!

மேற்கு வங்கம்: விடுதி அறையில் இருந்து மருத்துவ மாணவரின் சிதைந்த உடல் மீட்பு

வெறுப்புணர்வுக் கருத்து: அஸ்ஸாம் முதல்வருக்கு குவாஹாட்டி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

காங்கிரஸுடன் கூட்டணி? நல்லதே நடக்கும்: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT