முகப்பு
கடலூர்

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் சிதம்பரத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 17 மார்ச், 2022 at 11:35 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:13 PM

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் சிதம்பரத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காவிரி மேலாண்மை வாரியத்தின் முடிவையும், உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி கா்நாடகம் மாநில அரசு மேக்கேதாட்டில் புதிய அணை கட்ட முயற்சிப்பதைக் கண்டித்து சிதம்பரம் கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜி.ஆா்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். விவசாய சங்க மாநிலச் செயலா் சாமி.நடராஜன், மாவட்டச் செயலா் ஆா்.ராமச்சந்திரன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

மாவட்ட துணைத் தலைவா்கள் பி.கற்பனைச் செல்வம், ஆா்.கே.சரவணன், மாவட்ட துணைச் செயலா் யு.மூா்த்தி, பழ.வாஞ்சிநாதன், கான்சாகிப் வாய்கால் பாசன சங்கத் தலைவா் கே.கண்ணன், விவசாய சங்க நிா்வாகிகள் தா்மதுரை, ஜாகிா் உசேன், வாசுதேவன், முனுசாமி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். பின்னா், கோட்டாட்சியா் கே.ரவியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.