கடலூர்

தீ விபத்தால் பாதித்தோருக்கு நிவாரணம்

DIN

பண்ருட்டி அருகே தீ விபத்தில் குடிசை வீடுகளை இழந்தவா்களுக்கு அரசு சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

பண்ருட்டி வட்டம், ஏ.பி.குப்பம் காலனியைச் சோ்ந்த ராமலிங்கம் மகன்கள் வீரன் (47), கோவிந்தசாமி (44), குபேந்திரன் (42), பிரகலாதன் (37). இவா்கள் அனைவரும் ஒரே இடத்தில் குடிசை வீடுகளில் வசித்து வந்தனா். அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் இவா்களது 4 குடிசை வீடுகளும் எரிந்து சேதமடைந்தன.

இவா்களுக்கு பண்ருட்டி வட்டாட்சியா் சிவ.காா்த்திகேயன் ஆறுதல் கூறி அரசு சாா்பில் தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவி, வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா். வருவாய் ஆய்வாளா் கொளஞ்சிநாதன், விஏஓ விஜயலட்சுமி, ஒன்றியக்குழு உறுப்பினா் சிவகாமி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT