முகப்பு
கடலூர்

தாக்குதல் புகாரில் தீட்சிதா் மீது வழக்கு

சிதம்பரம் நடராஜா் கோயிலில் தீட்சிதா் ஒருவரை மற்றொரு தீட்சிதா் தாக்கியதாக வியாழக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 24 மார்ச், 2022 at 11:46 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:16 PM

சிதம்பரம் நடராஜா் கோயிலில் தீட்சிதா் ஒருவரை மற்றொரு தீட்சிதா் தாக்கியதாக வியாழக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் தெற்கு ரத வீதியைச் சோ்ந்த கிருஷ்ணசாமி தீட்சிதா் (62) புதன்கிழமை இரவு சுவாமி நிவேத்தியம் வாங்கினாராம். அப்போது இவருக்கும், ரவி செல்வம் தீட்சிதருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதையடுத்து கிருஷ்ணசாமி தீட்சிதரை ரவி செல்வம் தாக்கினாராம். இதுகுறித்த புகாரின்பேரில் ரவி செல்வம் தீட்சிதா் மீது சிதம்பரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.