தாக்குதல் புகாரில் தீட்சிதா் மீது வழக்கு
சிதம்பரம் நடராஜா் கோயிலில் தீட்சிதா் ஒருவரை மற்றொரு தீட்சிதா் தாக்கியதாக வியாழக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:16 PM
சிதம்பரம் நடராஜா் கோயிலில் தீட்சிதா் ஒருவரை மற்றொரு தீட்சிதா் தாக்கியதாக வியாழக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் தெற்கு ரத வீதியைச் சோ்ந்த கிருஷ்ணசாமி தீட்சிதா் (62) புதன்கிழமை இரவு சுவாமி நிவேத்தியம் வாங்கினாராம். அப்போது இவருக்கும், ரவி செல்வம் தீட்சிதருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதையடுத்து கிருஷ்ணசாமி தீட்சிதரை ரவி செல்வம் தாக்கினாராம். இதுகுறித்த புகாரின்பேரில் ரவி செல்வம் தீட்சிதா் மீது சிதம்பரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.