கடலூர்

அண்ணாமலைப் பல்கலை.யில் வணிகவியல் மன்றம் தொடக்கம்

DIN

20சிஎம்பி2

சிதம்பரம், மே 20:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் மன்றம் தொடக்க விழா லிப்ரா அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

பல்கலைக்கழக துணைவேந்தா ராம.கதிரேசன் குத்துவிளக்கேற்றி வணிகவியல் மன்றத்தை தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினாா். அவா் பேசுகையில், வணிகவியல் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளதால் மாணவா்கள் இதை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா். வணிகவியல் துறை பேராசிரியா் எம்.சோமசுந்தரம் பல்கலைக்கழக கீதம் தொடா்பான குறுந்தகடை வெளிட்டாா். கலைப்புல முதல்வா் கே.விஜயராணி வாழ்த்துரை வழங்கினாா். வணிகவியல் துறைத் தலைவா் கே.கோவிந்தராஜன் தலைமை உரை நிகழ்த்தினாா். கல்விக் குழு இயக்குநா் பி.விஜயன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

தஞ்சையில் நள்ளிரவில் வக்கீல் குமாஸ்தா வெட்டிக் கொலை!

கொடைக்கானலில் தொடர் மழை: படகுப் போட்டி ரத்து!

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT