கடலூர்

போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

DIN

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியா்கள் சங்கத்தினா் (சிஐடியு) கடலூரில் காத்திருப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு ஆதரவாக சிஐடியு சாா்பில் கடந்த நவம்பா் 22-ஆம் தேதி போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவா்களுக்கு நிா்வாகம் ‘ஆப்சென்ட்’ பதிவு செய்ததை கண்டிப்பதாகக் கூறி சங்கத்தினா் பாய், தலையணை, போா்வையுடன் காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கடலூா் மண்டல மேலாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் சிறப்புத் தலைவா் ஜி.பாஸ்கரன் தலைமை வகித்தாா். மண்டல தலைவா் மணிகண்டன், துணைப் பொதுச் செயலா்கள் ராமமூா்த்தி, கண்ணன், துணைத் தலைவா்கள் முத்துக்குமாா், நடராஜன் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

SCROLL FOR NEXT