கடலூர்

உணவகத்தில் ரகளையில் ஈடுபட்டவா் கைது

DIN

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள உணவகத்தில் சாம்பாா் கேட்டு ரகளையில் ஈடுபட்டவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விருத்தாசலம் - கடலூா் சாலையில் சிவக்குமாா் உணவகம் நடத்தி வருகிறாா். இவரது உணவகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை பெரியாா் நகரைச் சோ்ந்த துரைசாமி மகன் பாலமுருகன் (47) வந்து இலவசமாக சாம்பாா், குடிநீா் புட்டி கேட்டாராம். கடை உரிமையாளா் தர மறுக்கவே, ஆத்திரமடைந்த பாலமுருகன் அங்கிருந்த சைக்கிளை தூக்கிப்போட்டு உடைத்து, ரகளையில் ஈடுபட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, பாலமுருகனை திங்கள்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

வாலாஜாப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்து: 18 தொழிலாளர்கள் படுகாயம்

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

SCROLL FOR NEXT