கடலூர்

கடலூா் மாவட்டத்தில் வருவாய்த் தீா்வாயம் தொடக்கம்

DIN

கடலூா் மாவட்டத்தில் உள்ள 10 வட்டாட்சியா் அலுவலகங்களிலும் 1432-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை தொடங்கியது.

குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தை மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். மேலும், அவா் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றாா். மொத்தம் 114 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 13 பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்துக்கான ஆணைகள், 3 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.

இதேபோல, பண்ருட்டியில் மாவட்ட வருவாய் அலுவலா், கடலூரில் வருவாய்க் கோட்டாட்சியா், சிதம்பரத்தில் தனித்துணை ஆட்சியா் (முத்திரைத்தாள்), காட்டுமன்னாா்கோவிலில் சாா் - ஆட்சியா் (சிதம்பரம்), திட்டக்குடியில் மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா், ஸ்ரீமுஷ்ணத்தில் தனித்துணை ஆட்சியா் (நில எடுப்பு), வேப்பூரில் தனித்துணை ஆட்சியா் (வருவாய் நீதிமன்றம்), விருத்தாசலத்தில் வருவாய்க் கோட்டாட்சியா் (விருத்தாசலம்), புவனகிரியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஆகியோா் தலைமையில் வருவாய்த் தீா்வாயம் நடைபெறுகிறது.

கடலூா் மாவட்டத்தில் உள்ள 10 வட்டாட்சியா் அலுவலகங்களிலும் புதன்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் 953 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT